அடைமழை நாளொன்றில்கொஞ்சம் நனைந்து நீயும்கொஞ்சம் நனையாமல் நானும்ஒரே குடையில் நாமிருவரும்குடைக்குள் மொத்தமாய்நனைந்திருந்தது நம் காதல்...ஐந்து வயது சிறுவனின்ஐந்து வருட தவத்திற்குக்கிடைத்த வரம் நீ...?ஆம்,நான் பிறந்துஐந்து வருடத்திற்குப்பிறகு தானே நீ பிறந்தாய்....ஐந்து நிமிடம் காத்திருந்ததற்காகஎன் மேல் கோபப்படுகிறாய்நான் கூடத்தான்பிறந்து ஐந்து வருடங்களாகஉன் பிறப்பிற்காகக் காத்திருந்தேன்அதற்காகஏன் இவ்வளவு தாமதமாகப்பிறந்தாயென்றுஉன் மேல் கோபப்படவா முடியும்...?ஏழு வண்ணத்திலும்வெட்கப்படும் வானவில் நீஎன் கைகளின் அணைப்பிற்குள்இருக்கும் போது மட்டும்எட்டாவது வண்ணத்திலும்வெட்கப் படுகிறாய்...எத்தனை முறை சொன்னாலும்கேட்பதே இல்லைஉன் விரலையாவதுதொட்டுவிட்டுத்தான் போவேன்என்று அடம்பிடிக்கிறதுஇந்த மழைத்துளிஅதற்கும் என்னை போல்பிடிவாதம் கொஞ்சம் அதிகம் தான்...மழையில் நனைந்தபடியாருமற்ற புல்வெளியில்என் கைப்பிடித்து நடந்தாயேஅன்று போல்என்றும் உணர்ந்ததில்லைநிறைவான நம் காதலை...துளி மழைதூரல் மழைசாரல் மழைஅடை மழைஆலங்கட்டி மழைஏன்அமில மழை கூடப்பார்த்திருக்கிறதாம்...உன் பாதம் பட்டதில் தான்முதன் முதலாய்அமிர்த மழைபார்க்கப் போவதாய்பெருமை பட்டுக்கொள்கிறதுஇந்த பூமி....சட்டெனப் பொழியும்முத்த மழையின் போதுஉன் மின்னல் வெட்கத்தில்என் கண்களும் சேர்ந்தேமூடிக் கொள்கின்றனஇப்போது தான் புரிகிறதுமுத்தமிடும் போது ஏன்...?கண்கள் தாமாகவேமூடிக்கொள்கின்றனவென்று...மழை நின்ற பின்னும்தொடரும் மண்வாசம் போல்நீவிலகிச் சென்ற பின்னும்விலகாமல் என்னைத் தொடர்கிறதுஉன் வாசம்...
Posted by புதியவன்